வயது ஏற ஏற ஆண்கள், பெண்கள் ஆகிய இரு பாலரின் பாலியல் செயல்பாட்டில் பல் வேறு மாற்றங்கள் ஏற்படுகிறது. இவை, வயதாவதால் ஏற்படுகிறதா அல்லது வயது தொடர்புடைய நோய்கள் இவ்வாறு பாதிக்கின்றனவா என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால், ஆண்கள் மற்றும் பெண்களின் பாலியல் வாழ்க்கையில் வயது தொடர்பான பாலியல் மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை.
இந்த மாற்றங்கள் மெதுவாக ஆனால் படிப்படியாக ஏற்படுகின்றன. பெரும்பாலும் 40 வயதிற்கு பின்னரே இந்த மாற்றங்கள் உணரப்படுகின்றன. நீரிழிவு அல்லது உயர் இரத்த அழுத்தம் போன்ற சில நோய்கள் கூட பாலியல் செயலிழப்பிற்குப் பின்னரே தாக்குகின்றன.
ஆண்களின் மாற்றங்கள்
பாலியல் ஆசை மெதுவாகக் குறைந்து போவது. விந்து அளவு குறைந்து போவது. இந்த மாற்றங்கள் எவ்வகையிலும் கருத்தரிப்பதை பாதிக்காது. வயதாவதால் விந்து தாமதமாக வெளியேறுவது, எனவே விந்து முந்துதல் ஏற்பட வாய்ப்பில்லை. விந்து உற்பத்தி நீண்ட நேரம் எடுக்கின்றது. வயது தசைகள் மற்றும் நரம்புகள் பலவீனப்படுகிறது. விறைப்பு குறைவை சந்திக்க நேரிடும். இனப்பெருக்க உறுப்பிற்கு போதுமான இரத்த ஓட்டம் மற்றும் நரம்பு பலவீனம் காரணமாக விறைப்பை இழக்க வேண்டியிருக்கின்றது.
உச்சத்தை அடையும் நேரம் அதிகரிக்கக் கூடும். சிறு வயது ஆண்கள், 10 நிமிடங்களில் உச்சத்தை அடைகிறார்கள் என்றால் இவ்வகை வயதான ஆண்கள் உச்த்தை அடைய 20 அல்லது -25 நிமிடங்கள் ஆகலாம்.
பெண்களின் மாற்றங்கள்
இளம் பெண்கள் ஒரு சில விநாடிகளில் உடல் உறவிற்குத் தயாராகிவிடுவார்கள், ஆனால் 45 வயதைக் கடந்த மாதவிடாய் நின்ற பெண்களுக்கு, உறவிற்கு தயாராக அதிக நேரம் தேவைப்படும் இளம் பெண்கள் வேகமாக தூண்டப்படுவார்கள். வயதான பெண்களுக்கு பாலியல் உணர்வை தூண்டிவிட நீண்ட நேரம் வேண்டும்.வயதாவதால் உடல் பலவீனப்படுகிறது, எனவே பெண்கள் பாலியல் உணர்வை ஆசையை மெதுவாக, இழக்க நேரிடுகிறது. வயதான முதிர்ந்த பெண்களுக்கு இனப்பெருக்க உறுப்பு பாதிப்படைகிறது. மற்றும் பாலியல் உறவின் போது வறட்சி காரணமாக, பாகங்கள் உராய்வை ஏற்படுத்துகின்றன. இந்த நிலையில், பாலியல் செயல்பாடு முன்பை விட வலியை ஏற்படுத்தலாம். ஆண்டுகள் செல்ல செல்ல, உடலில் மட்டுமே மாற்றங்கள் ஏற்படுகின்றன ஆனால் மன மாற்றம் ஏற்படுவதில்லை.
வயதாக ஆக செயல்முறை குறைவதையும். நோய்கள் வருவதையும் கட்டுப்படுத்த முடியும். இவை அனைத்தும் ஆயுர்வேத சிகிச்சை மூலம் மட்டுமே சாத்தியம்.
ஆயுர்வேதம், பாலியல் கோளாறுகளை குணப்படுத்தவும், பாலுணர்வை மேம்படுத்தவும் எண்ணற்ற சூத்திரங்களை கொண்டுள்ளது. இவற்றில் வயதாவதை தாழ்த்தும் மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகள் அடங்கும். அவை உடல் சுகாதாரத்தை மீட்டு உடல் மற்றும் மனதிற்கு புத்துணர்ச்சி தருபவை. ஆயுர்வேத மருந்துகள் இயற்கை மூலிகைகள் மற்றும் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுவதால் பாதுகாப்பானவை எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தாதவை.