கொளுத்தும் வெயிலைச் சமாளிக்கும் வழிகளில் ஒன்றுதான் இளநீர். இந்த இளநீர் மனிதனுக்கு இயற்கை அளித்த மாபெரும் பரிசு. சுத்தமான ,சுவையான சத்தான பானம் இது. இளநீரின் கலோரிஅளவு17.4, 100 ஆகும்.
குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் போன்ற சர்க்கரைச் சத்துகள் இளநீரில் உள்ளன. இளநீரிள்ள குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் தேங்காய் முதிர்ச்சியடையும் போது சுக்ரோஸாக மாறிவிடுகிறது.
இளநீரில் பொட்டாசியம், சோடியம், கால்சியம் பாஸ்பரஸ், இரும்பு சேம்பு கந்தகம், குளோரைட் போன்ற தாது உப்புகள் அதிக அளவில் காணப்படுகின்றன. இவற்றில் பாதிக்கும் மேல் காணப்படுவது பொட்டாஸியம். இளநீரில் புரதச் சத்து குறைவாகவே உள்ளது. இருப்பினும் இப்புரதச் சத்தின் தாய்ப்பாலில் உள்ள புரதச் சத்தைவிட உயர்வானது.
இளநீர் ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும் விந்துவை அதிகரிக்கும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.
ஜீரணக் கோளாறுகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்தாகும். உடலில் ஏற்படும் நீர் நீக்கத்தை சரி செய்ய இளநீர் குடிப்பது நல்லது. வளர்ச்சியை அதிகரிக்கும் ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருட்கள் இளநீரில் உள்ளன. உடல் சூட்டை இளநீர் தணிக்கிறதது. வேர்க்குரு வேணிற்கட்டி அம்மை தட்டம்மையினால் ஏற்படும் தடிப்புகளைக் குணப்படுத்த இளநீர் உடம்பின் மீது பூசிகொள்ளலாம்.
இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது, இளநீரின் உப்புத்தன்மை, வழுவழுப்புத் தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்லதொரு பானமாகும். ஊட்டச்த்துக் குறைபாடுகளை சரி செய்கிறது.
சிறுநீப் பெருக்கியாக இளநீர் செயல்படுகிறது. சிறுநீர்க் கற்களைக் கரைக்க உதவுகிறது. சிறுநீரக வியாதிகளைத் தடுக்க உதவுகிறது.
இளநீர் மிக சுத்தமானது, சிவப்பு இரத்த அணுக்களை அழிக்காது இதனால்தான் இரத்தத்திலுள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. இளநீர் மருந்துகளை உடனடியாக உட்கிரக்க உதவுகிறது. இரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்பொருளை அகற்றவும் இளநீர் உதவுகிறது.