சுவாச மண்டலத்தில் இணைந்து செயல்படும் உறுப்புகள்
1. மூக்கு
2. தொண்டை
3. குரல் வளை
4. சுவாசக்குழல்
6. நுரையீரல்கள்
மூக்கு
சுவாச மண்டலம் ஆரம்பமாவது மூக்கிலிருந்து தான். இத்துடன் வாயையும் சேர்த்துக் கொள்ளலாம். வெளிக்காற்று சுவாச மண்டலத்துக்குள் மூக்கின் வழியாகவும், ஓரளவு வாயின் வழியாகவும் நுழைந்து, தொண்டை, குரல் வளை வழியே பயணிக்கிறது.
வெளிக்காற்றில் பல வித தூசிகளும் கிருமிகளும் நிறைந்துள்ளன என்பதால் இவைகள் நுரையீரலுக்குள் போகாமல் நமது மூக்கு ஒரு வடிகட்டி போல செயல்படுகிறது. மூக்கினுள் சிறு உரோமங்கள் உள்ளன. அத்துடன் கோழையும் சுரக்கிறது. இந்த கோழையில் உள்ள என்ஸைமுக்கு சில கிருமிகளை கொல்லும் ஆற்றல் உள்ளது. வெளிக்காற்றிலிருந்து வரும் தூசியும் கிருமியும் இவற்றில் சிக்கிக் கொள்கின்றன. சுத்தமான காற்று நுரையீரல்களுக்கு செல்கிறது.
உள்ளிழுக்கும் காற்றை ஈரமாக்குவதும், வெது வெதுப்பாக்குவதும் மூக்கின் மற்றொரு வேலை. காற்றை உடலுக்கு இதமான வெப்ப நிலைக்கு கொண்டு வருகிறது.
மூக்கின் மற்றொரு பயன் வாசனைகளை உணர்வதாகும் இதற்கான விசேஷமான ஏற்பிகள் (Receptors) மூக்கில் உள்ளன. மூக்கின் இரு பக்கமும் மேக்சில்லா (Maxilla) எனும் எலும்புகளில் உள்ள வெற்றிடங்கள் சைனஸ் (Sinus) எனப்படும். குரல் வளை எழுப்பும் ஒலிக்கு சரியான உச்சரிப்பையும், வடிவத்தையும் தருவது மூக்கும், சைனஸ் அறைகளும் தான். மூக்கு கண்கள் கசியும் கண்ணீருக்கு வடிகால் கால்வாயாக செயல்படுகிறது.
மூக்கு அடிக்கடி நோயினால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உண்டு. அதில் முதன்மையானது ஜலதோஷம்.