வேப்பம்பூக்கள்

Spread the love

வேம்பு நம் வாழுமிடத்திற்கு  அருகில் நிறைய காணக்கிடைக்கிற ஒரு மூலிகை.  நம் அன்றாட வாழ்க்கையில் வேப்பமரத்தை  ஒரு முறையேனும்  பார்த்து  விடுவோம்.அதே வேளையில் பயன்படுத்தியும் விடுவோம்.

இந்த வேப்பமரத்தின்  இலைகளும்  பூக்களும் கணிகளும்  மருத்துவக்குணம்  மிக்கவையோ. வேப்பம்  பட்டை , நீரிழிவுக்கு சிறந்த  மருந்து. உடம்பில்  ஏற்படும்  சன்னி கண்ட நோய்களுக்கு வேப்ப எண்ணையில் சிறிது  கற்பூரம் சேர்த்து சூடாக்கி தலை உச்சியில் தேய்க்க சன்னி தீரும் . அம்மை கண்டவர்களுக்ச் சுற்றி வேப்பிலை சொத்துகளை போட்டு  வைத்தால் இலைகளின் வாசனையால் நோயின் வேகம் தணிந்து விடும் .

தென்னிந்திய சமையலில்  வேப்பம்பூக்களுக்கு முக்கிய பங்குண்டு. தமிழ்நாட்டில்  சித்திரை வருடப் பிறப்பென்றும், ஆந்திரா, கர்நாடகாவில் யுகாதி  அன்றும் வேப்பம்பூவை ரசம்  வைத்தும், பச்சடியாகவும் எடுத்துக் கொள்கின்றனர் . மலர்கள் கடுமையான வயிற்று வலியையும் போக்கும் குணம் கொண்டவை.

பித்தம் , வாதம் , கபலம்  ஆகிய மூன்று நோய்களையும் சமன்படுத்த வேப்பம்பூ பயன்படுகிறது. ஒரு கைப்பிடி அளவு வேப்பம்பூவை எடுத்து உலர்த்தி  பொடி செய்து கால் டம்ளர் நீரில் சிறிது தூளைக் கலந்து சாப்பிட்டு வந்தால் பித்தம், வாதம், கபம் சமணப்படும்.

வேப்பம்பூவை நிழலில் உலர்த்தி வைத்துக் கொண்டு வற்றல்குழம்பு , மிளகுரசம் தயார்  செய்யும் போது சிறிது வேப்பம் பூவைச் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர வயிறு உப்பசம் பித்தம் வாதம் தொடர்புடைய நோய்கள் தீரும் கல்லீரல் பாதுகாக்கப்படும்.  வேப்பம்பூ பொடியில் தேன் கலந்து தினமும் 2 வேளை வீதம்  மூன்று நாட்கள் உட்கொண்டு வந்தால்  பித்தம் காரணமாக ஏற்படும் வாய்க்கசப்பு , வாந்தி  மயக்கம் போன்ற தொல்லைகள் நீங்கும். உலர்ந்த வேப்பம்  பூவை கறிவேப்பிலையோடு  துவையலாக்கி சாப்பிட , பித்தம் தொடர்பான சகல  பிணிகளும் நிவர்த்தியாகும்.

உடல்  பருமன் விஷயத்தில் வெப்பம்பூ மிகுந்த பலன் தருகிறது.  வேப்பம் பூவை தண்ணீரில்   ஊறவைத்து அதனை குடித்துவர உடல்பருமன் குறையும். இது அல்சரையும் குணமாக்கும் . உடலை வலுவாக. மாற்றுவதில் வேப்பம்பூக்களின் பங்கு முக்கியமானது .  தினம் இருவேளை வேப்பம்பூ பொடியை சாப்பிட முறைக்காய்ச்சல் நீங்கும்.

வேப்பம் பூவை வாட்டி தலையில் கட்டி வைத்தால் தலையில் உள்ள பேன், ஈறு, பொடுகு முதலியவை தீரும். இதை தலையின் உச்சியில் வைத்துக் கட்டினால் தலைபாரம் நீங்கி சுகமாக இருப்பதோடு கூந்தலும் செழித்து வளரும்.

வேப்பம்பூவைக் காய்ச்சி ,இந்த கஷாயத்துடன் ,நெல்லிக்காய் சாற்றையும், தேனையும் கலந்து உட்கொண்டால் சரும நோய்கள் நீங்கும். வேப்பம் பூவையும் எள்ளையும் அரைத்துக் கட்டினால் கொடிய கட்டிகளும் உடனே உடைந்துவிடும். வேப்பம்பூ கஷாயத்தை சிறிதளவு காலையிலும், மாலையிலும் குடிக்க செய்தால் குழந்தைகளின்  வயிற்றுக் கோளாறுகள் அகன்று வயிறு சுத்தப்படும்.


Spread the love