எலுமிச்சையில் உயிர் சத்தாக இருக்க கூடிய வைட்டமின் சி, ஒரு ஆண்டி-ஆக்ஸிடன்ட் ஆக நமது உடலில் ஏற்படும் பிரட்சனைகளுக்கு நல்ல ஒரு தீர்வாகும். சளி மற்றும் மூக்கடைப்பு இருக்கும்போது, அரை தம்ளர் தண்ணீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வர சளி குணமாகும். உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள் தினமும் காலையில் சுடு தண்ணீரில் எலுமிச்சை சாற்றை கலந்து குடித்து வந்தால் ஊளை சதை குறைவதோடு குடலில் இருக்கும் நச்சுகள் வெளியேறும்.
எலுமிச்சையில் இருக்கும் அசிடிக் அமிலம் பற்களில் தங்கியிருக்கும் கிருமிகளை வெளியேற்றி, பற்களை தூய்மையாக வைக்கும்.தொண்டை கரகரப்பு, மற்றும் அதனால் ஏற்படும் காய்ச்சலுக்கு, சுடு தண்ணீரில் எலுமிச்சைசாற்றை சேர்த்து, தேன் கலந்து ஒரு நாளைக்கு இரு முறை குடித்து வந்தால் பிரட்சனைகள் முடிவுக்கு வரும். எலுமிச்சை இயற்கையாகவே ஆண்டி-பாக்டீரியல் தன்மையை கொண்டிருக்கின்றது. அதனால் இது உடலில் பாக்டீரியாக்களையும், வைரஸ் தொற்றுகளையும் நீண்ட நாட்களுக்கு வேலை செய்ய விடுவதில்லை.
சுடு தண்ணீரில் எலுமிச்சை சாற்றை சேர்த்து குடித்து வர தொண்டை அழற்சி நீங்கும். எலுமிச்சையில் 22 வகையான ஆண்டி-கேன்சர் தொகுப்பாக உள்ளடங்கியுள்ளது. இது கேன்சர் கட்டிகள் முதல் கேன்சர் செல்கள் வரை அழிக்கும் என சொல்லப்படுகிறது. அது மட்டுமின்றி வயிற்று உபாதைகளை சரி செய்து மலச்சிக்கல் வராமலும் தடுக்கும்.மலச்சிக்கல் ஏற்படும்போது, சுடு நீரில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சேர்த்து குடித்தால் பிரட்சனை நீங்கும். அதோடு சிறுநீரக கல் ஏற்படாமலும் தடுக்கும். கல்லீரலை பாதுகாத்து, இரத்த அழுத்தத்தையும் குறைக்கும்.