கொள்ளு சாப்பிடும் முறை

Spread the love

வாத நோயைப் போக்கும் கொள்ளு உடலில் உள்ள வாதத்தை குறைக்கவும். வயிற்றின் செயல்பாட்டினை அதிகப்படுத்தவும். உடல் பருமன் குறையவும் கொள்ளு பயன்படுத்தப்படுகின்றது. கொள்ளை தினசரி ஏதாவது ஒரு விதத்தில் தொடர்ந்து 30 நாட்கள் உபயோகித்து வர வாத நாடி குறையும். உடல் வலி நீங்கும். உடல் எடை குறையும். ஜீரண சக்தி சீராகும் வயிற்று வலி நீங்கும் கொள்ளை அப்படியேவும் உபயோகிக்கலாம். முளைக்கட்டியும் உபேயாகிக்கலாம்.

கொள்ளு (காணம்) முளைக்கட்டும் முறை

சுமார் 10 மணி நேரம் நீரில் ஊற விட்ட பின்பு கொள்ளை எடுத்து நன்றாக கழுவி, வடித்து துளையிட்ட பிளாஸ்டிக் பாத்திரத்திலோ அல்லது வடிகட்டியிலோ போட்டு இன்னொரு பாத்திரத்தில் மூடி வைத்து விட்டால் அடுத்த நாள் காலை அனைத்து கொள்ளுமே முளை விட்டு விடும். (தேவையெனில் இரவில் சிறிது நீர் தெளிக்கலாம்).

கொள்ளு சூப்

தேவையான பொருட்கள்

முளைத்த கொள்ளு- 50 கிராம்

தக்காளி- 2

கேரட்- 1

அரிசி கழுவிய நீர்- 2 கப்

கொத்தமல்லி- சிறிது

உப்பு- தேவைக்கேற்ப

மிளகுபொடி- தேவையான அளவு

செய்முறை

முளைத்த கொள்ளை 2 கப் அரிசி கழுவிய நீரிலோ அல்லது தண்ணீரிலோ போட்டு, தக்காளியையும், கேரட்டையும் சிறு துண்டுகளாக வெட்டி போட்டு கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்த பின்னர், வடிகட்டி காய்களையும், கொள்ளையும் பிரித்து எடுத்து மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து கொதித்த சூப் நீருடன் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். கொத்தமல்லியை சேர்த்து கொதிக்க வைக்கவும். கொத்தமல்லியை சிறு துண்டுகளாக வெட்டி அத்துடன் உப்பு, மிளகுப்பொடி சேர்த்தால் கொள்ளு சூப் ரெடி. மசாலா விருப்பமுள்ளவர்கள் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, புதினா போன்றவற்றையும் சேர்த்து வாணலியில் இட்டு சிறு தீயில் பொன் வறுவலாக வறுத்து பின்னர் மேற்படி சூப்பை தயாரிக்கலாம். கொள்ளுடன் நல்லெண்ணெய் சேர்ப்பது மிக மிக நல்லது.


Spread the love
error: Content is protected !!