இரக்கம்

Spread the love

பெரியவர்தம் நோய்போல் பிறர்நோய்கண்டு உள்ளம்

எரியின் இழுதாவர் என்க; தெரியிழாய்

மண்டு பிணியால் வருந்து பிறவுறுப்பைக்

கண்டு கலுழுமே கண்.

இந்தப் பாடல் கிட்டத்தட்ட 325 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய சிவப்பிரகாச முனிவரால் இயற்றப்பட்ட நன்னெறி நூலில் வருகிறது. இதன் பொருள்-சிறந்த அணிகலன்களை அணிந்துள்ள பெண்ணே, கேள். மிகுந்த துன்பத்தை தரும் நோயால் உடல் உறுப்புகள் வருந்தும் போது, அதைக் காணும் கண்கள், தங்களுக்கு நோய் ஏதும் இல்லாவிட்டாலும், பிற உறுப்புக்களின் துன்பத்தை காணப் பொறுக்காமல் அழும். அது போல சான்றோர்கள் பிறர் துன்பத்தை கண்டால் அத்துன்பம் தமக்கே வந்தது போல், அனலிலிட்ட நெய் போல், மனம் உருகுவார்கள்.

இரக்கம் மனித குணம். இரக்கமின்மை அசுர குணம் நம்மை சுற்றி இருப்பவர்களின் துயர்கண்டு இரங்கி அவர்களுக்கு இயன்ற வரை உதவி செய்வதே இரக்கமுள்ள மனிதப் பண்பு. தமது சொந்த தாய் தந்தையரிடம் இரக்கமின்றி, அன்பின்றி முதியோர் இல்லங்களில் சேர்க்கும் பலரை நாம் கண்கூடாக பார்க்கிறோம். பல இலவச அநாதை முதியோர் இல்லங்கள் இப்போது  தோன்றியிருக்கின்றன. இவை செயல்படுவது இரக்கமுள்ள மனிதர்களின் உதவியால் தான். இரக்கமற்ற மனிதர்களால் வெளியேற்றப்படும் முதியோர்களுக்கு இரக்கமுள்ள மனிதர்கள் செய்யும் நன்மை இது.

உங்களால் முடிந்தவரை பிறருக்கு உதவுங்கள். துயரப்படுவோரை கண்டால் எண்ணி நகையாடாதீர்கள். அவர்களின் துயரை துடைக்க முயலுங்கள்.

உணவு நலம் மார்ச் 2011

இரக்கம், சிவப்பிரகாச முனிவர், உடல் உறுப்புகள், கண்கள், மனித குணம், இரக்கமின்மை, அசுர குணம், இரக்கமுள்ள மனிதப் பண்பு, தாய், தந்தை, முதியோர் இல்லம், அநாதை, முதியோர், குழந்தைகள் மீது இரக்கம், அநாதைகள், தாய், தந்தையின்றி தவிக்கும் குழந்தைகள்,


Spread the love