வெந்தயத்தைப் பொடி செய்து கோழி முட்டையின் வெள்ளைக்கருவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எலும்புத் தேய்மானத்தால் ஏற்படும் மூட்டுவலியிலிறுந்து நிவாரணம் பெறலாம்.
வெந்தயம் கீரை, மாதுளை ஓடு, வில்வ ஓடு இம்மூன்றையும் சம https://annamsshop.com/collections/herbs-herbalsஅளவிலெடுத்து, காயவைத்து பொடி செய்து, இரண்டு கிராம் பொடியை காலை, மாலை சாப்பிட்டுவந்தால் எலும்புத்தேய்மானத்தை தடுக்கலாம்.
ஆளிவிதை 100 கிராம் எடுத்து பொடி செய்து, குங்கிலி பஸ்பம் பத்து கிராம் சேர்த்து தினமும் இரண்டு கிராம் அளவிற்கு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
ஆலமர மொட்டுக்களை பொடிசெய்து சாப்பிட்டுவர இடுப்பு எலும்பு வலியை தடுக்கலாம்.
எலும்புத் தேய்மானத்தால் ஏற்படும் மூட்டு வலிக்கு அவுரி இலையை விளக்கெண்ணையில் வதக்கி ஒற்றடம் கொடுக்கலாம்.
அவுரி இலை, வாதநாராயணன் இலை, பூண்டு, மிளகு அனைத்தையும் எடுத்து அரைத்து தினமும் ஐந்து கிராம் அளவிற்கு சாப்பிட்டு வந்தால் மூட்டுவாதம், மூட்டுவீக்கம் குணமாகும்.
அமுக்கிராகிழங்கு, சுக்கு, ஏலக்காய், சித்தரத்தை தலா 100 கிராம் எடுத்து அறைத்து தினமும் ஐந்து கிராம் அளவிற்கு சாப்பிட்டு வந்தால் கை, கால், மூட்டு, இடுப்பு மற்றும் தொடை வலிகள் குணமாகும்.
அத்திக்காயை வேகவைத்து சிறுபருப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் கை, கால்வலி குணமாகும்.
அத்திமரத்திலிருந்து பால் எடுத்து சாப்பிட்டுவந்தால் மூட்டு, இடுப்பு வலிகள் மற்றும் தண்டுவடக் கோளாறுகள் நீங்கும்.
இவ்வாறு மேற்கண்ட வழிமுறைகளைப் பயன்படுத்தி எலும்புகளையும், வாழ்நாளையும் பல நோய்களிலிருந்து காக்கலாம்.
மேலும் தெரிந்து கொள்ள…