கூந்தல் பராமரிப்பில் மூலிகைகள் தான் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது. நமது நேயர்களின் நலனுக்காக என்ன மூலிகை என்ன பயன்தரும் என்று பட்டியலிட்டுலோம்.
பயன் என்ன?
அவுரி இலை -முடி வளரும்
மருதாணி இலை -கருமை பெரும்
கற்றாழை -அரிப்பு புண்
நெல்லி – கருமை
குளிர்ச்சி
கடுக்காய் -உதிர்தல்
முட்டை வெள்ளைக்கரு -புரத சத்து
ஆலிவ் எண்ணெய் வறட்சி நீங்கும்
சீயக்காய் -பிசுக்கை
துளசி கருமை தரும்
வல்லாரை -அரிப்பை நீக்கும்
பூவரசு -புண் ஆற்றும்
முடக்கத்தான் -முடி வளரும்
கரிசலாங்கண்ணி -மெருகு கூடும்.
தேங்காய் பால் -உதிர்வது
எலுமிச்சம் பழம் -வேர்க்கால்
பூலாங்கிழங்கு -வலு தரும்
ஆடு தின்னாப் பாலை -புழு வெட்டு
மஞ்சிட்டா -உதிர்வது
கோரைக்கிழங்கு -புதிய முடி வளர
ஆயுர்வேத மூலிகை மருத்துவ முறையில் இவை தவிர எண்ணற்ற மூலிகைகள் கூந்தல் பராமரிப்பிற்காக உள்ளன. பாரம்பரிய முறையில் அவரவர்களுடைய அனுபவ முறையில் மூலிகைகளை காய்ச்சி தைலங்கள் தயாரிக்கப்படுகின்றன.
தலைமுடியை பாதிக்கும் பொதுவான காரணங்கள் வயது, தட்ப வெப்ப நிலை, மாசுபடுதல், மாசுபட்ட தண்ணீர் போன்றவை. பலதரப்பட்ட வெளிநாட்டு அழகுச்சாதனங்கள் கிடைக்கும் இந்த நவயுகத்தில் கூட, இந்திய பெண்கள் குறிப்பாக தென்னிந்திய பெண்கள் இயற்கை எண்ணெய்களையே உபயோகிக்கின்றனர். வாராந்திர எண்ணெய் குளியல் செய்ய தவறுவதில்லை. எனவே, நம் நாட்டு பெண்களின் கூந்தல் அழகு சிறப்பாக உள்ளது.