கற்பூரவல்லி சாறு
தேவை:
கற்பூரவல்லி இலைகள் – 2
வெல்லம் – தேவையான அளவு
மஞ்சள் பொடி – 1 சிட்டிகை
செய்முறை
கற்பூரவல்லி இலைகளை நன்றாகக் கழுவி நசுக்கி சாறு பிழிந்து கொள்ளவும். இதனுடன் வெல்லத்தை சேர்த்து எடுத்துக் கொள்ளவும். ஒரு நாளைக்கு இரு வேளை எடுத்துக் கொள்ளலாம். இருமல் குறையும். மார்பில் கபம் கட்டியிருப்பது நீங்கும். உடல் வலிகள் குறையும். இது குழந்தைகளுக்கும் ஏற்றது.
கற்பூரவல்லி பானம்
தேவை
கற்பூரவல்லி இலைகள் – 3
ஜீரகம் – 1/2 டீஸ்பூன்
தேங்காய் துருவல் – 1/2 கப்
மோர் – 2 டம்ளர்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
கற்பூரவல்லி இலைகளை மிக சிறியதாக நறுக்கிக் கொள்ளவும். எண்ணெய்யில் ஜீரகத்தை போட்டு கற்பூரவல்லி இலைகளை நன்கு வதக்கவும். இத்துடன் மோரையும், உப்பையும் சேர்த்து கிளறவும். இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். இருமலும், ஜலதோஷமும் விலகும்.
துளசி சாறு
தேவை
துளசி இலைகள் – 20
கருமிளகு – 2
தேன் – 1 டீஸ்பூன்
செய்முறை
துளசி இலைகளை கழுவி சாறு எடுக்கவும். இத்துடன் மிளகுப்பொடி, தேனைச் சேர்த்து எடுத்துக் கொள்ளவும். இதை குழந்தைகளுக்கு கூட கொடுக்கலாம். இது இருமல், ஜலதோஷம் மற்றும் ஜுரத்திற்கு நல்ல நிவாரணத்தை அளிக்கும்.