முக்கனி மூலிகை – திரிபாலா

Spread the love

திரிபாலா ஆயுர்வேதத்தில் அதிகமாக உபயோகப்படுத்தப்படும் அற்புத மருந்து. சம அளவில் நெல்லிக்கனி, கடுக்காய், தான்றிக்காய் இவை மூன்றும் கலந்த மூலிகை கலவை. இந்த மூலிகை கலவை வயிற்றை சுத்திகரித்து உடலிலிருந்து நச்சுப் பொருட்களை நீக்கும். தொன்மையான ஆயுர்வேத நூல்களில் திரிபாலா ஜீரண சக்தியை அதிகரித்து உடல் சக்தியை கூட்டும் அற்புத மருந்தªன்று புகழப்படுகிறது.

முதலில் திரிபால மருந்தில் இருக்கும் மூன்று மூலிகை கண்களைப் பற்றி பார்ப்போம்.

நெல்லி

இந்தியன் கூஸ்பெர்ரி என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் நெல்லி சமஸ்கிருததத்தில் தத்திஃபாலா‘ “பூமியின் எதிர் காலம்” என்றும் ஹிந்தியில் ஆம்லாசுத்தமானது என்றும் பெயர் பெற்றுள்ளது. தாவரவியலில் எம்பிளிக்கா அஃபிஸினேலிஸ்Emblica officinalis என்று வகைப்படுத்தப்பட்டு எம்பிளிமிரோ பாலன்Embilic myrobalan என்று பொதுவாக விளங்குகிறது.

அன்றாட வாழ்வில் எளிமையாக கிடைக்கக் கூடியதும் பல நற்பலன்களை மனிதனுக்கு தருகின்ற மூலிகைகளின் முதலிடத்தை பெறுவது நெல்லியாகும். சரகர் தனது ஆயுர்வேத நூலில் நெல்லியை சிறப்பாக விளக்கி நெல்லி மனிதனுக்கு அனைத்து நோய்களையும் எதிர்க்கும் திறனை தருகிறது என்றும் நெல்லி வயது முதிர்ச்சியை காலம் தாழ்த்துகிறது என்றும் பெருமைப்பட எழுதியுள்ளார்.

நெல்லி மூளைக்கு வலுவூட்டியாகவும் திகழ்கிறது. மன அழற்சியை குறைத்து மூளையின் செயல்திறனை மேம்படுத்துகிறது. நெல்லிக்காயை பொடியாக்கி அதனை பல பிரச்சனைகளுக்கு எளிதாக பயன்படுத்தலாம். ஆயுர்வேதத்தில் சியவளபிராஷ்போன்ற தயாரிப்புகளில் நெல்லி முக்கிய இடத்தை வகிக்கின்றது.

கடுக்காய்

கடுக்காயை ஒரு எளிமையான பொருள் என்று கருத வேண்டாம். சிலர் ஏமாற்றுவதை “கடுக்காய்” கொடுத்து விட்டான்” என்று சொல்வது வழக்கம். கடுக்காய் பல மருத்துவ குணங்கள் உடையது.

ஆயுர்வேதத்தின் தேவ வைத்தியராக வணங்கப்படும் தன்வந்திரி பெருமான் எப்பொழுதும் கடுக்காயை கைவசம் வைத்திருப்பாராம். இந்திரன் அமர்த பானம் பருகிய போது ஒருதுளி கீழே சிந்தி, அதுவே கடுக்காய் விருட்சம் ஆனதாக சொல்லப்படுகிறது. எல்லா நோய்களுக்கும் நிவாரணம் கொடுக்கும் அரிய குணத்தை பெற்றிருப்பதால் கடுக்காய் வடமொழியில் அரிதகிஎன்றழைக்கப்படுகிறது. தாயினும் சாலப்பரிந்து, பிணிகளை போக்குவதால் கடுக்காய் தாயினும் மேலாக சொல்லப்படுகிறது.

கடுக்காயின் ஆங்கில மருத்துவப்பெயர்: ‘Terminalia chebula’ Black Myrpbalan என்றும் அழைக்கப்படுகிறது. வட இந்தியாவில் உத்திரபிரதேசம், இமயமலையின் அடி வாரங்கள், வங்காளம், மேற்குத்தொடர்ச்சி மலைகள், சத்பூரா, வடகர்நாடகா இந்த இடங்களில் காணப்படுகிறது கடுக்காய் மரம்.

இதன் பழங்கள்தான் கடுக்காய் எனப்படும். பழங்களில் செபூலினிக் (chebulinic) அமிலத்தால் ஏற்படும் “ஆஸ்டிரிஜென்ட்” (Astringent) பொருள் 30% உள்ளது. தவிர டேனிக் அமிலம் (Tannic acid), கால்க் அமிலம் (Gallic acid), பிசின் போன்றவை உள்ளன. கடுக்காயின் பல வகைகள் இருந்தாலும் குணங்களில் அதிக வித்யாசமில்லை.

கடுக்காயின் மருத்துவ பயன்கள்

இருமல் நீங்கும். சுவாசநோய்கள் குணமாகும். மூலநோய் இரைப்பை நோய், வயிற்றுக் கோளாறுகள், குரல் கம்மல், இருதய நோய்கள், மல பந்தம், கண்வலி, தொண்டைப்புண், போன்றவற்றுக்கு கடுக்காய் உபயோகமாகும். நரைநீங்க கடுக்காய் தைலம் பயன்படுகிறது.

கடுக்காய் வாந்தியை தணிக்கும். கடுக்காய் தோலையும், நில ஆவாரையும் சேர்த்து செய்யப்படும். மருந்து மலக்கட்டை நீக்கும். பிஞ்சுக்கடுக்காய், ஏலஅரிசி, சீரகம் சேர்த்து செய்யப்படும் மருந்து வயிற்றுவலியை போக்கும்.

கடுக்காயை வாயிலடக்கிக் கொண்டால் இருமல் நிற்கும். இந்த வீட்டுவைத்தியம் அநேகமாக அனைவருக்கும் தெரிந்த வீட்டு வைத்தியம்.

தான்றிக்காய்

தான்றிக்காயின் தாவரவியல் பெயர் – Terminalia Balerica / Beleric Myrobalan,சமஸ்கிருதம் – பஹீரா, இந்தி – பஹேரா

தமிழில் இதர பெயர்கள் – அக்கம், விபீதகம், தானிக்காய்

தான்றிக்காய் மர வகுப்பை சேர்ந்தது. இந்தியாவின் வறண்ட பிரதேசங்களை தவிர 3000 அடி உயரத்தின் கீழே உள்ள எல்லா பிரதேசங்களிலும் விளையும்.

இதன் பொது குணங்கள் – கோழையை அகற்றும், மலமிளக்கி, டானிக்

மருத்துவ குணங்கள்

உடலுக்கு அழகையும், ஒளியையும் கொடுத்து மூன்று தோஷங்களையும் தன்னிலைப்படுத்தும்.தான்றிப் பொடியை தேனில் கரைத்துக் கொடுத்தால் அம்மை நோய் விலகும்.

கண்களை காக்கும்.

புண்பட்ட இடங்களில் இதை அரைத்துப் பூசினால் புண்கள் ஆறும்.

தான்றிக்காயை வறுத்து கோதுமை மாவுடன் பிசைந்து சிறிய உருண்டைகளாக்கி, வாயில் அடக்கிக் கொண்டால் தொண்டைப்புண் இருமல், கோழை இவை விலகும்.

தனித்தனியாகவே இந்த மூன்று மூலிகைகளும் சிறந்தவை. ஒவ்வொன்றும் மூன்று தோஷங்களை சீரான நிலையில் வைக்கும் திறனுடையது. வாததோஷத்திற்கு கடுக்காய் உகந்தது. மிதமான மலமிளக்கி. நரம்புகளை வலுப்படுத்தும். நெல்லிக்கனி பித்ததோஷ கோளாறுகளை கண்டிக்கும். இதுவும் மிதமான மலமிளக்கி. உடலுக்கு குளிர்ச்சி உண்டாக்கும். கபதோஷ கோளாறுகளுக்கு (ஆஸ்த்துமா, இருமல் ஒவ்வாமை) தான்றிக்காய் நல்ல மருந்தாகும்.

எனவே இந்த மூன்று மூலிகைகளும் கலந்த திரிபாலா மூன்று தோஷங்களையும் சமநிலையில் வைக்கும்.

திரிபாலாவின் பயன்கள்

ஜீரண சக்தியை அதிகப்படுத்தும், மலச்சிக்கலை போக்கும். மிதமான மலமிளக்கி வயிற்றை சுத்தீகரிக்கும். உடல் இருந்து நச்சுப்பொருட்களை நீக்கும்.கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும். உடல் இளைக்க உதவும்.

கல்லீரல் செயல்பாடுகளை ஊக்குவிக்கும்.

உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கும்.

கண்களுக்கு நல்லது. கண் தொற்றுகளுக்கு மருந்தாக பயன்படும்.

சரும வியாதிகளுக்கு நல்லது.

புலன்கள் தெளிவாக இயங்க உதவுகின்றது. உடலை இளமையாக வைக்க உதவுகின்றது.

கபத்தை கரைத்து இருமலை குணப்படுத்துகின்றது. மூல வியாதிக்கு நல்ல மருந்து.

எச்சரிக்கை

திரிபாலா சூரணத்தை கர்ப்பிணிகள் உபயோகிப்பதை தவிர்க்கவும். அதே போல் பேதியாகும் போது திரிபாலா கொடுக்கப்பட கூடாது. இது உடல் எடையை குறைக்க உதவுவதால், உடல் எடை குறைவாக உள்ளவர்கள் திரிபாலாவை பயன்படுத்த வேண்டும்.     


Spread the love