மென்மையான மற்றும் மிருதுவான சருமத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். உடலில் மிக மிருதுவான பகுதி கைகள் என்றே கூறலாம்.
ஆனால் நம் கைகளை பராமரிக்க, சற்றே நாம் மறந்து விடுகிறோம். அனைத்து வேலைகளையும் நம் கைகளை பயன்படுத்தியே செய்கிறோம் என்பதால் நம் கைகளை பாரமரிக்க மறந்து விடுகிறோம்.
பாத்திரங்களை கழுவுதல், துணி துவைத்தல் போன்ற வேலைகளுக்கு ரசாயன பொருட்களை பின் சன்ஸ்கிரீன் போன்றவற்றை உபயோகிக்க தவறிவிடுகிறோம்.
இதன் விளைவாக கைகளில் வறட்சி, அரிப்பு, வெடிப்பு, இரத்தம் கசிதல், வலி ஆகியவை ஏற்படுகின்றன. இருந்தாலும், கைகளை சரியாக பராமரித்து வந்தால் மென்மையான கைகளை பெறலாம். அதற்கான சில வழிகள்.
கைகள் பராமரிப்பு
முகத்தை போலவே கைகளும் மிகவும் மென்மையானது. எனவே முகத்தை போலவே கைகளையும் மிகவும் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும். கைகளில் ஏற்படும் ஈரப்பதம் இழப்பை ஈடு செய்ய மாய்ச்சரைசர் கிரீம் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
வாரத்தில் ஒரு நாள் வெது வெதுப்பான நீரில் சிறிது உப்பு கலந்து அதில் கைகள் மூழ்குமாறு 15 நிமிடம் வைத்திருக்க வேண்டும். அதன் பின் மிருதுவான துணியால் துடைக்க வேண்டும்.
கைகளுக்கு கீரிம் தடவி கொள்ள வேண்டும். அதன் பின், அவற்றின் மீது கையுறைகள் அணிந்து கொள்ள வேண்டும்.
கைகளில் இறந்த செல்களை நீக்க, கரகப்பான கீரிம்கள் தடவி அவற்றை நன்கு தேய்த்து விட வேண்டும். பின் சிறிது நேரம் கழித்து அவற்றை கழுவி, மிதமான ஹெண்ட் வாஷ் தடவ வேண்டும்.
அவற்றை மிதமான நீரில் கழுவ வேண்டும். இதன் மூலம் இரத்த ஓட்டம் சீராகும். மிருதுவான துணியால் கைகளை துடைத்த பின் ஹேண்ட் லோஷன் தடவ வேண்டும். கைகளை மிருதுவாக வேண்டுமானால், இந்த முறையை வாரத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும்.
வயதானால், தோலில் சுருக்கம் மற்றும் கோடுகள் போன்றவை ஏற்படுகின்றன. சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்கள் நேரடியாக தோலில் படுவதால், சீக்கிரமாக வயதான தோற்றம் ஏற்படும். இவற்றில் இருந்து சன்ஸ்கிரீன்கள் பாதுகாப்பு அளிக்கிறது.
மென்மையான மற்றும் மிருதுவான சருமத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. உடலில் மிகவும் அழகான பகுதி கைகள் என்றே கூறலாம். ஆனால், கைகள் பராமரிப்பிற்கு அவ்வளவாக யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
பாத்திரங்கள் கழுவுதல், துணி துவைத்தல் உட்பட பல வேலைகளுக்கு கைகளையே பயன்படுத்துகிறோம். இந்த செயல்களுக்கு ரசாயனங்கள் கலந்த பொருட்களை பயன்படுத்திய பின் சன்ஸ்கிரீன் போன்றவற்றை உபயோகிக்க தவறி விடுகிறோம்.
இதன் விளைவாக, கைகளில் வறட்சி, அரிப்பு, வெடிப்பு, இரத்தம் கசிதல் மற்றும் வலி ஆகியவை ஏற்படுகின்றன. எனினும், கைகளை பராமரிக்க போதிய கவனம் செலுத்தினால், இவற்றை தவிர்க்க முடியும். அதற்காக சில டிப்ஸ்கள் இதோ…
கைகள் பராமரிப்பு
முகத்தில் காணப்படும் தோலைப் போலவே, கைகளின் பின்புறம் காணப்படும் தோலும் மிகவும் மென்மையானது. எனவே, முகத்தைப் போலவே, கைகளுக்கும் அதிக கவனம் செலுத்தி பராமரிக்க வேண்டும்.
குறிப்பாக, கைகளில் ஏற்படும் ஈரப்பதம் இழப்பை ஈடு செய்ய, மாய்ச்சரைசர் கிரீம் போன்றவற்றை பயன்படுத்துவதோடு, ரசாயனங்கள் நேரடியாக கைகளில் படுவதையும் தவிர்க்க வேண்டும்.
ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும், வெது வெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு கலந்து அதில் கைகளை மூழ்குமாறு, 15 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும்.
அதன்பின் கைகளை நன்றாக துடைத்துவிட்டு, கைகளுக்கான கிரீம் தடவ வேண்டும். இது கைகளின் தோலுக்கு ஊட்டமளிக்கும். கிரீம்கள் தடவிய பின், அவற்றின் மேலே கையுறைகள் அணிந்து கொள்வது நல்லது.
ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீர் எடுத்து அதில் பாதி எலுமிச்சை, 1 துளி டெட்டால் மற்றும் சிறிது ஷாம்பு சேர்த்து அதில் கைகளை சிறிது நேரம் ஊற வைக்கவும்.
கைகளை பிரஷ் வைத்து நன்கு தேய்த்து கழுவவும். சிறிது நேரம் கழித்து துடைத்து விட்டு. சிறிது நேரம் கழித்து தேங்காய் எண்ணெய்யை தேய்த்து வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கைகள் எப்போதும் மென்மையாக இருக்கும்.