இஞ்சிப்பால்
செய்யறது எப்படி?
ஆள்காட்டி விரல் பருமனில் சிறிய துண்டு இஞ்சியை எடுத்து தோலை சீவவும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நன்கு நசுக்கி, பின் முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நன்கு கொதிக்க விடவேண்டும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கிய பின் அதை வடிகட்டி சாறை எடுக்கவும்.
பின் அரைக்குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அதனுடன் வடிகட்டிய சாரத்தை கலந்து கொள்ளவும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்பு சுவைக்காக சேர்க்கவும். இஞ்சிப்பால் தயார்.
இஞ்சிப்பால் தினமும் பருகுவதால் ஏற்படும் நன்மைகள்:
நுரையீரல் சுத்தமாகும்.
சளியை நீக்கும்.
வாயுத் தொல்லை என்பதே வராது.
தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைத்து விடும்.
தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம்.
அதிகமான எடை இருந்தால் படிப்படியாக குறைந்து விடும்.
ஒல்லியாக வேண்டும் என்று நினைப்பவர்கள் தொடர்ந்து குடிக்கலாம்.
இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏதாவது இருந்தால் நீங்கி விடும். அதனால் மாரடைப்பை தடுக்கும் சத்தி இதற்கு உள்ளது.
முக்கியமாக பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும்.
தினமும் சாப்பிட்டால் உடல் சுறு சுறு என்று இருக்கும். தினமும் இந்த பாலை அனைவருமே சாப்பிடலாம். 3 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் சாப்பிடலாம். ஆனால் வாய்ப்புண், வயிற்றுப் புண், மலவாயில் புண், எரிச்சல் இருப்பவர்கள் தவிர்க்கவும்.
குறிப்பு:
இஞ்சிப் பாலை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.
ஜோ.கி