இல்லறமும், சர்க்கரையும்

Spread the love

நாள்பட்ட நீரிழிவு நோயால் ஏற்படக் கூடியது நரம்புத் தளர்ச்சி. நீரிழிவு உடையவர்கள் அனைவருக்குமே நரம்புத் தளர்ச்சி தலை தூக்க ஆரம்பிக்கும். நீரிழிவு நோயால் முதலில் பாதிக்கப்படுவது நரம்பு மண்டலம் எனவே நீரிழிவு உடையர்களுக்கு நரம்புத் தளர்ச்சி ஏற்படும். அதனால் ஆண்மைக் குறைவு ஏற்படும். நீரிழிவு உடையவர்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படுமென்றாலும் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளாவிட்டால் முழு அளவில் ஆண்மைக் குறைவு ஏற்பட்டு விடும்.

சாதாரணமாகவே, செக்ஸ் செயல்பாடுகள் மற்ற மனித உறுப்புகளின் செயல்பாடுகளை விட சிக்கலானவை. நரம்புகள், உடல் அமைப்பு, வளர்சிதை மாற்றம் (விமீtணீதீஷீறீவீsனீ), எண்ணங்கள், உணர்ச்சிகள், ஹார்மோன்கள், சூழ்நிலை, பார்வை, நுகர்தல், வாசனை போன்ற பலவற்றின் சரியான செய்கைகளே பாலுணர்வை தூண்டி, பாலியல் உறவுக்கு உதவுகின்றன. நரம்பு மண்டலம் முக்கிய பங்கு வகிப்பது பாலுணர்வில் தான். மனதும் உடலும் சேர்ந்து ஒத்துழைக்கும் போது ஆசையில் ஆரம்பிக்கும் உணர்வுகள், உடலுறவில் முடிந்து திருப்தி அடையும். டயாபடீஸ் மனதையும் உடலையும் பாதிக்கும் நோய். இதனால் ஆண் / பெண் உறவுகளில் கோளாறு உண்டாகும்.

ஆண்மைக் குறைவு

ஆண்களில் பாலுறவின் போது நரம்புகளின் செயல்பாடு மிகவும் முக்கியமானது. பாலுறவின் போது நுகர்தல் (வாசனையை உணரும் திறன்) மற்றும் உணர்தல் (தொடுவதை உணரும் திறன்) ஆகிய இரண்டும் தான் பாலுறவின் செயல்பாட்டிற்கு தூண்டுதலாக அமைகின்றன இதனை சிறப்பாகச் செய்பவை சிறிய நுண்ணிய நரம்புகள் தான். பெண்கள் மாதவிலக்கின் போது பாலுறவில் அதிக நாட்டம் கொள்வதும் இந்த நுகரும் திறன் அதிகரிப்பது தான் காரணம் என ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளன.

பார்வை நரம்புகளும் பெரிய அளவில் பாலுணர்ச்சியை தூண்டக் கூடியவை பார்வை நரம்புகளின் செயல்பாட்டால் தான் எதிர் பாலினரைக் கண்டவுடன் பாலுணர்வு அதிகமாகின்றது. இரவு தூங்கும் பொழுதும் கனவில் பாலுறவு கொள்வது போல கனவு வருவதும் இந்த பார்வை நரம்புகளின் செயல்பாட்டால் தான்.

தொடு உணர்வு தான் ஆணுறுப்பிற்கு விரைப்பைத் தருகிறது ஆணுறுப்பின் முன் புறமுள்ள டார்சஸ் நரம்புகள் அதிக தொடு உணர்வு கொண்டவை எனவே தான் ஆணுறுப்பைப் பிறர் தொட்டவுடன் விரைப்பு ஏற்படுகின்றது.

ஆணின் உறுப்பில் மூன்று சைனு சாய்ட்ஸ் உள்ளன. இவை “விரைக்கும்” திசுக்களுடையவை. இரண்டு கார்போராகாவர்நோஸா (Corpora cavernosa) தவிர ஒரு கார்பஸ் ஸ்பாஞ்சியோசம் என்ற ‘ஸ்பாஞ்ச்’ போன்ற நாளங்கள் உள்ளன. இவை இரத்த ஓட்டத்தை பொருத்து சுருங்கி விரியும் தன்மையுடையவை. இந்த இரத்த நாளங்களின் கிளைகளாக தந்துக்கள் பிரிந்து, ஸைனுசாய்டலிடம் சேருகின்றன. சிறுநாளங்களும், தந்துக்களும் (Venules) ஆண்குறியில் மேற்பாகத்தை சுற்றி வலை போல் பின்னியிருக்கும்.

மேற்சொன்ன உந்துதல்களால் தூண்டப்பட்ட மூளை, தண்டு வடம் வழியாக, ஆணுறுப்புக்கு செய்தியை அனுப்பும். இதன் விளைவாக காவர்னஸ், மற்ற நாளங்கள் விரிவடைகின்றன. இதனால் விரிவடையும் இரத்தக் குழாய்களை நிரப்ப இரத்தம் அதிக அளவில் பாயும். இரத்தத்தால் நிரப்பப்பட்ட ஆண்குறி பெரிதாகி விரைத்து நிற்கும். தசைகள் ‘எலாஸ்டிக்’ போல, இரத்தத்தை வெளியேற்றும் நாளங்களை “கட்டிவிடும்” இதனால், இரத்த ஓட்டம் குறையமுடியாமல், விறைப்பு நிற்கும். ஆசை தணிந்தபின் இந்த செயல்பாடுகள் reverse ஆக நடக்கும்.

ஆணுறுப்புக்கு விரைப்புத் தன்மை ஏற்படுவதற்கு அதிக இரத்த ஓட்டம் தேவைப்படுகிறது. விரைப்பு ஏற்படும் பொழுது இரத்த நாளங்கள் விரிவடைகின்றன இயல்பாக இருக்கும் பொழுது சிறியதாக இயல்பாக இருக்கின்றன நீரிழிவு நோய் ஏற்படும் பொழுது இந்த இரத்த நாளங்கள் செயல்பாட்டை இழக்கின்றன. இதனால் சரியாக இரத்த நாளங்கள் உறுப்பினுள் இரத்தத்தை தேக்கிட சிரமப்படுகின்றன. மொத்த உடலின் இரத்த ஓட்டமும் சீராக இயங்கிட முடியாததால் தண்டு வடம் பாதிப்படைகிறது இதனால் ஆண் உறுப்பு விரைப்படைவது தடைபடுத்துகிறது.

மன இறுக்கம் தோன்றி பாலுறவு வேட்கையைத் தடை செய்து விடுகின்றது சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருந்தாலும் மற்ற சில விஷயங்கள் விரைப்படைவதை தடைபடுத்துகின்றன அவை.

நோய்க் கிருமிகள், அதிக கொழுப்புச்சத்து (கொலஸ்ட்ரால்), உயர் இரத்த அழுத்தம், பிற மருந்து மாத்திரைகளால் ஒவ்வாமை அல்லது அழற்சி, தைராய்டு, டென்ஷன், மன அழுத்தம், சுரப்பிக் கோளாறுகள், வயது, எடை, உடல் பருமன், உடல் உழைப்பின்மை

இவை அனைத்துடனும் சர்க்கரை நோய் அல்லது சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் ஆண்மைக் குறைவு ஏற்படுகின்றது.

பெண்மைக் குறைவு

பெண்களை பொருத்த வரையில், பாலுறுப்புகளுக்கு வரும் பல இரத்த நாளங்கள் பெரிடோனியம் (அடி வயிற்றின் மிருதுவான, தெளிவான ஜவ்வு) பகுதிகளிலிருந்து வரும். இந்த நரம்புகள் மென்மையானவை. சீக்கிரம் சேதமுறக்கூடியவை. பெண்களின் சிறுநீரகம், கீழ்முதுகு, இடுப்பு, போன்ற இடங்களிலிருந்து வரும் ஸிம்பதெடிக் (பரிவு) நரம்புகள் தசைகளை இயக்குபவை. இந்த நாளங்கள், நரம்புகள் எல்லாம் சிறியவை, கிளை நரம்புகள். இந்த நரம்புகள் பெண் உறுப்பில் உள்ளவை. இவையே பாலுறவின் போது விரிந்து சுருங்கி உணர்ச்சி வசப்படுகின்றன. சர்க்கரை வியாதியால் இந்த நரம்புகள் / நாளங்கள் பாதிக்கப்படும். பூரண உணர்ச்சி இல்லாததால் பெண் உறுப்பு ஈரமாகி விரிவாகுவது நடக்காது. உடலுறவு அப்போது வலியை உண்டாக்கும். பெண்ணுறுப்பு வரட்சி, இரத்தம், சுரப்பு நீர் இல்லாத நிலை, வலியுள்ள உடலுறவு ஏற்படுகின்றன. இதனால் பெண்களுக்கு உடலுறவு பிடிக்காமல் போய் விடுகிறது.  

ஆண்மைக் குறைவு ஏற்படாமல் தவிர்க்கவும் குறைபாடு இருப்பின் அவை அதிகரிக்காமல் தடுக்கவும் முன்னெச்சரிக்கை அவசியம். தக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக் கொள்வது அவசியம். மாற்றத்தை ஏற்படுத்தி இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வது அவசியம்.

கட்டுப்பாடான வாழ்க்கை, அதே சமயம் சர்க்கரை அளவை அதிகரிக்காத போஷாக்கான உணவு முறை, உடற்பயிற்சி, தக்க இடைவெளியில் பரிசோதித்துக் கொள்வது, தகுந்த மருத்துவ ஆலோசனை, மருத்துவம், இரத்த அழுத்தம் இருப்பின் அதனையும் கட்டுப்பாட்டிற்குள் வைப்பது போன்றவை அத்தியாவசியத் தேவை.

இயற்கை முறையிலும் மூலிகை முறை மருத்துவத்திலும் இவற்றிற்கு இன்றியமையாத எண்ணற்ற வழி முறைகளும் மூலிகைகளும் உள்ளன. அவற்றை காலம் தாழ்த்தாமல் தக்க சமயத்தில் கலந்து ஆலோசித்து உபயோகிக்க, நீரிழிவுடன் வாழப்பழகிக் கொள்ளலாம்.


Spread the love