அதிக காரம் ஆபத்து

Spread the love

மிளகாய்களில் பல வகையுண்டு. சமையலுக்கு, ஊறுகாய்களுக்கு, மசாலாக்களுக்கு என்று விற்கப்படுகிறது. ஆந்திரா மிளகாயை விட தேஜ்பூரில் விளையும் நாகாஹாரி ரகம் தான்  உலகிலேயே அதிக காரமுள்ள மிளகாய்கள் என்று கூறப்படுகிறது.

அதிக காரமுள்ள உணவு உடல், வயிற்றுக்கு தீங்கு விளைவிக்கும். மேலை நாடுகளில் மிளகாய் காரத்திற்கு பதிலாக மிளகை உபயோகிப்பார்கள். மிளகு காரம் அதிகம் பாதிப்பல்லை. ஊறுகாய்களுக்கு அதிக காரம் தேவைப்படும். அவை கெடாமல் பதமாக இருப்பதற்கு தான் உணவில் மட்டும் மிதமான காரத்தை உபயோகிக்கலாம்.

காரமான உணவு உடல் சூட்டை அதிகரித்து உடல் பருமனும் அடைகிறது.. பசியும் கூடுவதால் உணவின் அளவும் அதிகரிக்கிறது. மிளகாய்  குறைவாக உபயோகிப்பவர்களின் உணவும் மிதமாக இருக்கும். உணவில் இனிப்பு, காரம், புளிப்பு எல்லாமே மிதமாக இருக்க வேண்டும்.

காரசாரமான உணவிற்கு முக்கிய காரணமாய் இருப்பது மிளகாய். நமது சமையலில் மிளகாய்க்கு சிறப்பான இடம் உண்டு. இது ஊசி மிளகாய், குண்டு மிளகாய், குடமிளகாய் என மூன்று வகைகளைக் கொண்டது. இவை காரத்தன்மையால் வேறுபடுகின்றன.

குடமிளகாயின் குணங்கள்

குடமிளகாய் காரம் குறைந்தது. இத்தாவரத்தின் காய் சமையலுக்கும், கனிந்த கனிகள் மற்றும் விதைகள் நறுமணப்பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுகின்றன. இத்தாவரத்தில் ஒலியோரெசின், கேப்சைசின், கரோடினாய்டுகள், பிளேவனாய்டுகள், எளிதில் ஆவியாகும் எண்ணெய் மற்றும் ஸ்டிராய்டல், சபோனின்கள், கெப்சைசிடின்ஸ் – பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.

விதைகளுடன் கனிகள், ஜீரணத்தை ஊக்குவித்து உடலுக்கு வலுவேற்றுகிறது. தசைக்குடைச்சல் வலியை போக்கும் தன்மை கொண்டது. கிருமி நாசினியாக செயல்படுகிறது. வியர்வை மற்றும் ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும். வலிபோக்கும் மருத்துவத்தில் பயன்படுகிறது.

உடலுக்கு வெப்பத்தினை தரும் தன்மை. ரத்த ஓட்டத்தினை அதிகரிக்க உதவுகிறது. கை, கால், ஆகிய பகுதிகளுக்கும், மற்ற மைய உறுப்புகளுக்கும் ரத்த ஓட்டத்தினை சரி செய்கிறது. கெப்சைசின் எனும் வேதிப்பொருள் இத்தன்மைக்கு அடிப்படையாகிறது.

தோல்களின் மீது தடவும் போது நரம்பு நுனிகளின் உணர்வினை மழுங்கச் செய்து ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கிறது. தோல் வியாதியான சொரியாசிஸ், நியூரால்ஜியா மற்றும் தலைவலி, மூட்டுவலி, ஆகியவற்றையும் போக்க வல்லது. பாக்டீரியாக்களுக்கு எதிராக செயல்புரிகிறது. உள்ளுக்குள் சாப்பிடும் போது வயிற்றுவலி, வாயு தீர்க்கும். ஜீரண சுரப்பிகள் சுரக்க தூண்டும். ஜீரண மண்டல நோய்களைப் போக்கும். தொண்டை கரகரப்பு கொப்பளிப்பாக பயன்படுகிறது. இந்திய மருத்துவத்தில் சின்கோனாவுடன் சேர்த்து நாட்பட்ட மூட்டுவலிக்கு மிளகாய் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

எப்போதுமே அதிக காரம் ஆபத்துதான் என்றாலும், கோடை காலத்தில் அதிக காரம் ரொம்ப ஆபத்து.


Spread the love