மூச்சுத் திணறலை விரட்டும் மூலிகைகள்!

Spread the love

மூச்சுத் திணறல் என்பது தவிர்க்க முடியாத பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. உலக அளவில் மூச்சுத் திணறலால் பாதிக்கப்படுபவர்களின் சதவீதம் குறைந்தபாடில்லை. நம் மூக்கை சுற்றியுள்ள காற்று அறைகளை சைனஸ் என்கிறோம். இந்த அறைகள் தான் தலைக்குப் பாதுகாப்பையும், முகத்துக்கு வடிவத்தையும், குரலுக்குத் தனித்தன்மையையும் கொடுக்கின்றன. இவற்றிலிருந்து சளி உற்பத்தியாகி, மூக்கின் வழியே வெளிப்படுகிறது. இந்த பாதையில் அடைப்பு ஏற்படும் போது மூச்சுத் திணறல், காற்றறைகளில் வலியும் கிருமித் தொற்றும் ஏற்படுகிறது.

காய்ச்சல், உடல் சோர்வு, இருமல், மூக்கடைப்பு, தலை பாரம், மூக்கில் நீர் வடிதல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும். 

சித்த மருத்துவத்தில் தீர்வு

15 மி.லி. துளசி இலைச்சாறுடன் தேன் கலந்து உண்ணலாம். ஒரு கிராம் பேரரத்தைப் பொடியை பாலில் கலந்து பருகலாம். ஆடாதொடை இலை, வேர் இரண்டையும் கைப்பிடியளவு எடுத்து நான்கு பங்கு தண்ணீர் சேர்த்து, அதை ஒரு பங்காக வற்றவைத்து தேன் கலந்து அருந்தலாம்.

கசகசாப் பொடியில் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிடலாம். கைப்பிடியளவு கண்டங்கத்திரிச் செடியில் நான்கு பங்கு தண்ணீர் சேர்த்து, அதை ஒரு பங்காக வற்றவைத்து அருந்தலாம். பெருஞ்சீரகப் பொடி, மிளகுத் தூள், பனங்கற்கண்டு, சம அளவு எடுத்து அதில் ஒரு ஸ்பூன் அளவு உண்ணலாம்.

தவசு முருங்கையிலைச் சாறு 15 I.L.அருந்தலாம். ஒரு ஸ்பூன் தும்பைப் பூச்சாறுடன் கற்கண்டு சேர்த்து அருந்தலாம். அரை ஸ்பூன் தூதுவளைப் பொடியில் தேன் கலந்து உண்ணலாம். சதகுப்பை இலைப் பொடியில் சம அளவு சர்க்கரை சேர்த்துக் கலந்து அதில், அரை ஸ்பூன் உண்ணலாம். 15 I.L. கற்பூரவல்லிச் சாறைக் கற்கண்டு சேர்த்து அருந்தலாம்.

ஆதண்டைக் காயை வற்றலாகச் செய்து சாப்பிடலாம். ஊமத்தையும் சுக்கையும் சம அளவு எடுத்துப் பொடித்து, அதை அரை ஸ்பூன் தேனில் கலந்து உண்ணலாம். 50 கிராம் மணத்தக்காளி வற்றலை, 200 I.L. வெந்நீரில் ஊறவைத்து வடித்து அருந்தலாம். திப்பிலிப் பொடியுடன் பனங்கற்கண்டு சம அளவு சேர்த்து, அரை ஸ்பூன் பாலில் கலந்து உண்ணலாம். வெற்றிலைச் சாறு 15 I.L. எடுத்து மிளகுத் தூள் கால் ஸ்பூன் அளவு சேர்த்து உண்ணலாம்.

சுக்கை களியாகச் செய்து நெற்றியில் பற்று போடலாம். Ôவங்கத்தை நீர்விட்டு மை போல் அரைத்து நெற்றியிலும், மூக்கின் மேலும் பற்று இடலாம். செம்பைப் பூவை எண்ணெயில் இட்டுக் காய்ச்சித் தலையில் தேய்க்கலாம்.

அகிற்கட்டைத் தைலத்தைத் தலையில் தேய்க்கலாம். கண்டுபாரங்கியைக் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்த்து அரைத்துப் பற்று போடலாம். சுக்கைத் தாய்ப்பாலில் அரைத்து, நெற்றியில் பற்றிட்டு அனல் படும்படி லேசாகக் காட்டலாம்.


Spread the love