மஞ்சள் உலகின் சக்திவாய்ந்த மற்றும் இயற்கையாகவே மருத்துவக்குணம் நிறைந்துள்ள பொருட்களில் ஒன்றாகும். குறிப்பாக மஞ்சளானது நோய் எதிப்பு அமைக்கு ஆதரவு மற்றும் அழற்சி குறைபாடுகள் சிகிச்சையில் பெரிதும்பயன்படுகிறது. ஆனால் அத்தோடு அதன் நன்மை நின்று விடுவது இல்லை மேலும் மஞ்சள் மற்றும் பால் இயற்கையான ஆன்டி&பயாடிக் பண்புகளை க் கொண்டுள்ளன.
மஞ்சள் பால் &ஒரு அங்குல மஞ்சள் துண்டை எடுத்துக் கொள்ளவும் அதை பாலில் போட்டு 15 நிமிடங்கள் கொதிக்கவிடவும். பின் பாலை வடிகட்டி மஞ்சளை எடுத்து விடவும்.பின்பு குளிரவைத்து,இந்த பாலைக் குடிக்கவும்.இப்போது இறைவன் நமக்கு தந்த இந்த அற்புதமான அன்பளிப்பின் முக்கிய நன்மைகளைப் பார்ப்போம்.
சுவாசப் பிரச்னைக்கு தீர்வு& மஞ்சள்பால் பாக்டீரியா நோய்த்தொற்றுகள் மற்றும் நச்சுயிரி சார்ந்த நோய்த் தொற்றுகளைத் தாக்கும் நுண்ணுயிர் ஆகும் . இந்த மசாலாப் பொருள் உடலை வெப்பப்படுத்தும் என்பதால் நுரையீரலின் சளித் தேக்கம் மற்றும் சைனஸ் பிரச்சனைக்கு விரைவான நிவாரணம் வழங்குகிறது. அது மட்டுமன்றி சுவாச அமைப்பு தொடர்பான நோய்களான ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி போன்றவற்றிற்கு சிகிச்சை அளிப்பதில் பயனுள்ளதாகவும் இருக்கிறது.
புற்றுநோய் வராமல் தடுக்க&மஞ்சள் பால் நோயெதிர்ப்பு அழற்சி பண்புகளைக் கொண்டுள்ளதால் இது மார்பகம் சரும, நுரையிரல், புராஸ்டேட் மற்றும் பெருங்குடல் புற்று நோயின் வளர்ச்சியை தடுக்கிறது மற்றும் நிறுத்தவும் செய்கிறது.
தூக்கமின்மை& வெதுவெதுப்பான மஞ்சள்பால் அமினோஅமிலம் டிரப்தோபன் போன்றவற்றை உற்பத்தி செய்து அமைதியான மற்றும் பேரின்ப தூக்கத்தை தூண்டும் என்று கூறப்படுகிறது.
ஜலதோஷம் மற்றும் இருமல் போன்றவற்றிற்கு மஞ்சள் பால் ஜலதோஷம் மற்றும் இருமலுக்கு ஒரு சிறந்த தீர்வாக கருதப்படக்காரணம் அதன் நச்சுயிரிக்கு எதிரான குணமும் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் ஆகும், இது தொண்டைப் புண் இருமல் மற்றும் சளிக்கு உடனடி நிவாரணம் அளிக்கிறது. கீல்வாதம் மஞ்ள்பால் கீல்வாதத்தை குணப்படுத்துவும் நாள்பட்ட மூட்டு வலிகளின் காரணமாக ஏற்படும் வீக்கத்திற்கு சிகிச்சைஅளிக்கவும் பயன்படுகிறது.மேலும் இது வலியைக் குறைத்து நெகிழ்தன்மையுள்ள மூட்டுகள் மற்றும் தசைகள் உருவாக்க உதவுகிறது.
வேதனை மற்றும் வலிகள்&&& மஞ்சள் தூள் கலந்த பொன்னான பால் வேதனை மற்றும் வலிகளிலியிருந்து சிறந்த நிவாரணம் அளிக்கிறது. இதனால் உடலில் உள்ள முதுகெலும்பு மற்றும் மூட்டுகளையும் வலுப்படுத்த முடியும்.
ஆன்டி& ஆக்ஸிடன்ட் மஞ்சள் ஒரு தடையற்ற முழுமையான எதிர் ஆக்ஸிகரணிகளுக்கு ஒரு சிறந்த ஆதாரமாக உள்ளது. இதனால் பல வியாதிகளை குணப்படுத்தவும் முடியும்.
இரத்தத்தை சுத்தப்படுத்தும்& மஞ்சள் பால்ஆயுர்வேத பாரம்பரியத்தில் தூய்மைப்படுத்தும் ஒரு பொருளாகவும் மற்றும் சுத்தப்படுத்தியாகவும் கருதப்படுகிறது.இது உடலில் இரத்த ஓட்டத்திற்கு உயிர்ப்பூட்டு பொருளாகவும் மற்றும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்ச் செய்யும் உதவுகிறது. மேலும் இது நிணநீர் அமைப்பு மற்றும் இரத்த குழாய்களில் இருக்கும் அனைத்து நச்சுகளையும் நீக்கி இரத்த மெலிவூட்டியாக வேலை செய்கிறது.
கல்லீரல் நச்சு நீங்க மஞ்சள்பால் ஒரு இயற்கையான
கல்லீரல் நச்சு நீக்கியாக விளங்குகிறது. இது இரத்தத்தை தூய்மைப்படுத்தி இதனால் கல்லீரல் நன்றாக செயல்பட உதவும் ஒரு ஊக்கியாகவும் இருக்கறது . இதன் தூய்மைப்படுத்தும் குணத்தினால் இது கல்லீரலுக்கு ஆதரவாகவும் மற்றும் நிணநீர் மண்டலத்தையும் சுத்தமாக்குகிறது.
எலும்பு ஆரோக்கியம் மஞ்சள்பாலில் கால்சியம் சிறைந்து காணப்படுவதால் அவை எலும்புகள் ஆரோக்கியமாக மற்றும் வலுவாக வைத்திருக்கவும் உதவுகிறது.
செரிமான சீரமைப்பு& மஞ்சள்பால் சக்திவாய்ந்த கிருமி நாசினியாக இருப்பதால் குடல் சுகாதாரத்தை ஊக்குவிக்கிறது.மேலும் வயிற்று புண்களையும் மற்றும் பெருங்குடல் அழச்சியையும் கட்டுப்படுத்துகிறது. அதுமட்டுமன்றி இது சிறந்த செரிமான சுகாதாரத்திற்கும் மற்றும் வயிற்றுப் புண்கள் வயிற்றுப் போக்கு மற்றும் அஜீரணத்தையும் தடுக்கிறது.