சருமத்திற்கு அழகு சேர்க்கும் வினிகர்

Spread the love

வினிகர்  என்றால் சமைப்பதற்கு மட்டும் தான் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் வினிகர் பல நன்மைகளைக் கொண்டது . வினிகரை சருமத்துக்கு பயன்படுத்தினால், முகம் பொலிவாவதோடு, பருக்கள், வறட்சி, கரும்புள்ளிகள் போன்றவற்றை போக்கிவிடும் என்பது  குறிப்பிடத்தக்கது. சருமத்தை சோக்காக வைக்க விரும்புபவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம். வினிகரை சருமத்தில் எப்படி பயன்படுத்துவது   என்பதை இனி பார்ப்போம்.

சிலருக்கு உழைப்பினால் உடலில் வேர்வை உண்டாக்கி துர்நாற்றம் வீசும். அத்தகையவர்கள் ஒரு சிறிய கப் வினிகரை குளிக்கும்நீரில் கலந்து குளித்தால் உடல் துர்நாற்றமானது நீங்கும்.

ஒரு சிறிய டேபிள் ஸ்பூன்வினிகரை முகம் கழுவும் போதோ அல்லது குளிக்கு போதோ    நீரில் கலந்து தேய்த்தால், சருமம் நன்கு மென்மையாவதோடு  பொலிவோடும் இருக்கும்.

எண்ணெய்ப் பசை சருமத்தினருக்கு  சருமத்தில் அதிகப்படியான எண்ணெயானது இருக்கும். எனவே, ஒரு கப் நீரில்  பாதிக்கு பாதி வினிகர் மற்றும் தண்ணீரை கலந்து கழுவி வந்தால் சருமத்திலிருந்து வெளிவரும் அதிகப்படியான எண்ணெய் பசையானது நீங்கி முகம் அழகாக அளவான எண்ணெயோடு வறட்சியின்றி காணப்படும். அதிகப்படியான வெயிலால் சருமத்தில்  ஏற்படும் வேனிற்கட்டியை போக்குவதில் வினிகர் உதவியாக உளளது. மேலும் வினிகர் சருமத்தில் பி எச் தன்தையை சீராக தக்க வைத்து சருமத்தை குளிர்ச்சியுடன் வைக்கிறது. வெயிலால்  சருமத்தில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சல்,  கொசுக்கடி பூச்சிக்கடியால் ஏற்படும் எரிச்சல் மற்றும் வெட்டுக்காயம் போன்றவற்றை குணப்படுத்துவதற்கு பெரிதும் உதவுகிறது.  பாதத்தில் ஏதேனும்  பிரச்சனை இருந்தால் , அதனை போக்குவதற்கு வினிகரை நீரில் கலந்து ,அதில் கால்களை ஊற வைக்க வேண்டும். குதிகால் வெடிப்பால் அவஸ்தைப்படுபவர்கள்,  மெருகேற்ற உதவும் கல் கொண்டு , பாதங்களை தேய்த்து பின் வினிகர் நீரில் பாதங்களை ஊறவைக்க வேண்டும். இதனால் பாத வறட்சி நீங்கி குதிகால் வெடிப்பு போய்விடும்.  கைகள் அழுக் கோடு மென்மையிழந்து இருக்கிறதா? அப்படியெனில் கைகளில் உள்ள கிருமிகளை போக்குவதற்கு வினிகர் கலந்த நீரில், கைகளை கழுவ வேண்டும்.இதனால் கிருமிகள் நீங்குவது மட்டுமின்றி, கைகளும் மேன்மையாகும்.

3 ஸ்ட்ரா பெர்ரியை மசித்து , அதில் சிறிது ஆப்பிள் சீடர் வினிகரை ஊற்றி கலந்து 2 மணிநேரம்  ஊற வைத்து  இரவில் தூங்கும் முன் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி ஊற வைத்து, காலையில்  கழுவினால் கரும்புள்ளிகள் அறவே போய்விடும்.


Spread the love