குப்பைமேனி

Spread the love

குப்பைமேனி குப்பை யல்ல. பல பலன்களை தரும் மூலிகை. இதை மார்ஜால மோகினிஎன்பார்கள். வடமொழியில் மார்ஜாலம் என்றால் பூனையை குறிக்கும். இந்த செடி அருகில் பூனை போகாது என்கிறார். மூலிகை சக்ரவர்த்தி, வேலூர் டாக்டர் திரு. ஏ.ஆர். கண்ணப்பர்.

இந்தியா முழுவதும் காணப்படும் குப்பைமேனி செடி, ஒரு அடி உயரமுள்ளது. சிறிய, பல கிளைகளுடன் அடர்த்தியான செடி. இதன் இலையில் ஒரு ரூபாய் அளவு மஞ்சள் புள்ளிகள் காணப்படலாம். இலையின் ஓரம், ரம்பத்தின் பற்கள் போலிருக்கும். பூக்கள் வெண்மையாக, மிகச்சிறதாக இருக்கும். காய்கள் மிளகு போல், பச்சையாக இருக்கும்.குப்பை மேனி செடியை ஒரு களைஅல்லது புல் பூண்டுஎன்றே சொல்லாம்.

சமஸ்கிருதம் – அரித்தமஞ்சரி, ஹிந்தி – குப்பி, கோகாலி,

தமிழில் இதர பெயர்கள் – அரிமஞ்சரி, பூனை வணங்கி, மேனி

இதன் பயன்கள்

வயிற்றுப்பூச்சிகளை வெளியேற்ற குப்பைமேனி செடியை வேருடன் எடுத்து, செடியை (வேர் உள்பட) நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி உலர வைக்க வேண்டும். இதில் ஒரு கைப்பிட எடுத்து, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு காய்ச்சி, ஆற வைத்து வடிகட்டவும். அதை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், பேதியாகி, மலத்துடன் வயிற்றுப்பூச்சிகள் வெளியேறும். சிறுவர்களுக்கு பாதி அளவு கொடுத்தால் போதும். சித்த வைத்தியத்தின் படி, இலைகளை சாறு பிழிந்தோ, குடிநீர்லிட்டோ சிறுவர்களுக்கு 1 முதல் 4 தேக்கரண்டி வரை கொடுக்கலாம். வெறும் இலைகளை பொடித்துக் கொடுத்தாலும், வயிற்று பூச்சி, புழுக்கள் வெளியேறும். குப்பைமேனி வேரை (50 கிராம்) எடுத்து, 200 மி.லி. நீரில் காய்ச்சி குடிநீராக குடித்தால், நாடாப்பூச்சி போன்ற அரைத்து பூச்சிகளும் வெளியேறும்.

மூலம், பௌத்திரம் நோய்களுக்கு 

குப்பைமேனி, மூலம், பௌத்திரம் போன்ற ஆசனவாய் நோய்களுக்கு, பத்தியம் கூட தேவையில்லாத சிறந்த மருந்து என்கின்றனர் மூலிகை வைத்தியர்கள். பூக்கள் பூத்த, செழிப்பான செடிகளை, வேருடன் பறித்து சுத்தம் செய்து, நிழலில் உலர்த்தி, வஸ்திரகாயம் செய்து, சூரணம் தயார் செய்து கொள்ள வேண்டும். இந்த சூரணத்தில் 2-5 கிராம் அளவு எடுத்து காலை, மாலை, 45 நாள் சாப்பிட்டு வர, மூலம், பௌத்திரம் குணமாகும். இந்த 48 நாட்களில் மோர், தயிர், நெய், அதிகம் சேர்த்துக் கொண்டால் நல்லது. பத்தியம் ஏதும் தேவையில்லை.

சுவாச மண்டல நோய்களுக்கு 

இலைப்பொடி 950 மி.கி, 1500 மி.கி. வரை கொடுகுக இருமல் தணியும். சுவாச நோய்கள் குணமாக, குப்பைமேனி இலைச்சாற்றை வடிகட்டி, 4 தேக்கரண்டி வீதம் 7 நாட்கள் கொடுத்து வரலாம்.

படுக்கைப்புண்

ஆமணக்கு எண்ணையில், குப்பைமேனி இலையை வதக்கி, இளஞ்சூட்டுடன் வைத்துக்கட்டினால் படுக்கைப்புண்கள் குணமாகும். குப்பைமேனி இலையை மென்மையாக அரைத்து, புண், காயங்களில் மேல் வைத்துக்கட்டினால் எந்த புண்ணும் குணமாகும். கூட மஞ்சளும் சேர்த்துக் கொள்ளலாம்.

வாய்வு, அஜீரணம், வயிற்று வலிக்கு

குப்பைமேனி இலைச்சாற்றுடன் சம அளவு உப்பைக்கரைத்து, அடுப்பில் வைத்து, சுண்டக்காய்ச்ச வேண்டும். உப்பு பூர்த்துமிகுந்து விடும். இந்த உப்பை தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இந்த உப்பை 5 கிராம் அளவில் தினசரி இரு வேளை சாப்பிட்டு வர, வயிற்று – வாய்வு கோளாறுகள் நீங்கும்.

தலைவலி

இந்த செடியின் இலையை பொடி செய்து, மூக்கில் பொடி போல் இருக்க நீர் வடிந்து தலைவலி குணமாகும். ஆயுர்வேதத்தில் இதை நசியமிடுதல்என்பார்கள்.

சர்ம நோய்களுக்கு

இலை, உப்பு, மஞ்சள் மூன்றையும் சேர்த்து அரைத்து, சொறி, சிரங்குகளுக்கு பூசி ஒரு மணி நேரம் கழித்து குளித்து வர, குணம் காணும்.

குப்பை மேனியை விஷக்கடிகளுக்கு பயன்படுத்தலாம். என்கின்றனர் சித்த வைத்தியர்கள்

காந்தி மெயிலைக்கறி கனிவுடனயில் மெய்

 யாந்திமிர் வாத நோயாதிகள் போய்விடும்.”

குப்பை மேனி இலையை, உணவு முறையாக பிரியமுடன் புசித்து வருபவரின் உடலிலுள்ள திமிர்வாதம் முதலிய நோய்கள் நீங்கும்” என்கிறது மேற்கண்ட சித்த வைத்திய பாடல்.

உணவு நலம் மார்ச் 2011

குப்பைமேனி, இதன் பயன்கள், மூலம், பௌத்திரம் நோய்களுக்கு, சுவாச மண்டல நோய்களுக்கு, படுக்கைப்புண், வாய்வு, அஜீரணம், வயிற்று வலிக்கு, தலைவலி,

சர்ம நோய்களுக்கு, மூலிகை, டாக்டர், குப்பைமேனி செடி, –அரித்தமஞ்சரி,

வயிற்றுப்பூச்சி, சித்த வைத்தியம், வயிற்று பூச்சி, புழுக்கள், மூலம், பௌத்திரம், ஆசனவாய் நோய்களுக்கு, மருந்து, மூலிகை வைத்தியர்கள், சுவாச நோய்கள்,

வாய்வு கோளாறுகள், ஆயுர்வேதம், நசியமிடுதல், சித்த வைத்தியர்கள்,


Spread the love