எது அறுசுவை உணவு

Spread the love

நம்மில் பலர் வாழ்வதற்காக உண்கிறோம். சிலர் உண்பதற்காக வாழ்கின்றனர். எப்படியிருந்தாலும் வயிற்றை நிரப்பவும், பசியை போக்கவும் உணவை உண்டே ஆக வேண்டும். அந்த உணவு சுவையாக இருந்தால் நல்லது.

இதமான உணவு புருஷ வளர்ச்சிக்கு காரணம். இதமற்ற உணவு நோய்க்கு காரணம்”

என்கிறார் ஆத்ரேயர்.

சுவைகளை ஆயுர்வேதம் “ரசம்” என்கிறது. ஆறு சுவைகளை விவரிக்கிறது. இந்த ரசங்கள்நீரில் அடிப்படையில் அமைந்தவை என்றும், உலகில் உணவுப் பதார்த்தங்கள் தோன்றிய போதே இச்சுவைகளுடன் தோன்றின என்கிறது ஆயுர்வேதம். இந்த சுவைகளை உணர்வது நாக்கு. இந்த ஆறு சுவைகள்.

இனிப்பு (மதுரம்)

புளிப்பு (அம்லா)

உப்பு (லவணா)

உரைப்பு (காட்டு)

கசப்பு (திக்தா)

துவர்ப்பு (கஷாயா)

முதல் மூன்று சுவைகள் உடலை வளர்ப்பவை. கடைசி மூன்று சுவைகள்சீரழிப்பவை. எல்லா சுவைகளும் இரண்டு பஞ்ச பூதங்களின் கலவை. இந்த சுவைகளைப் பற்றி விரிவாக பார்ப்போம்.

இனிப்பு– பூமி, நீர் – இந்த இரண்டு மகா பூதங்களடங்கியது இனிப்புச் சுவை. இனிப்புச் சுவை உள்ளவை – அரிசி, பருப்பு, வெல்லம், சர்க்கரை, பால், தேன், கிழங்குகள், முட்டைகள், மாம்பழம், வாழைப்பழம், நெய் போன்றவை. கபதோஷ கோளாறுகளில் இனிப்பை தவிர்க்க வேண்டும். இனிப்பு வாயுவை தணிக்கும். கபத்தை வளர்க்கும்.

புளிப்பு– இந்த சுவை பூமி, நெருப்பு பூதங்களால் ஆனது. வாதத்தை சாந்தப்படுத்தி, கபத்தையும், பித்தத்தையும் அதிகரிக்கும். எலுமிச்சை, தக்காளி, புளி, நெல்லிக்காய், சாத்துக்குடி, ஆரஞ்ச் பழ வகைககள், தயிர், மாங்காய் இவை புளிப்பு சுவைக்கு உதாரணங்கள்.

உப்பு– இந்த சுவை பித்தத்தையும், கபத்தையும் வளர்க்கும். நெருப்பு, நீர் பூதங்களால் ஆனது. உதாரணங்கள் – அப்பளம், ஊறுகாய்.

உரைப்பு– இந்த காரச்சுவை வாயுவும் நெருப்பும் சேர்ந்த கலவை. வாதத்தையும் பித்தத்தையும் அதிகரித்து, கபத்தை கட்டும். மிளகாய், மிளகு, இஞ்சி, பூண்டு, வெங்காயம் இவை இந்தச் சுவைக்கு உதாரணங்கள்.

கசப்பு– ஆகாயமும், வாயுவும் கலந்த சுவை. வாயுவை தூண்டி, கப பித்தத்தை குறைக்கும். பாகற்காய், வெந்தயம், மஞ்சள், மசாலாக்கள், பசலைக்கீரை – இவை இந்த சுவைக்கு உதாரணங்கள்.

துவர்ப்பு– பூமியும், வாயுவும் இணைந்த சுவை. பித்தத்தையும், கபத்தையும் குறைக்கும். இந்த சுவையுள்ள உணவுகள் – பருப்புகள், தேயிலை, முட்டைகோஸ், காலிப்ளவர் போன்றவை.

சில உணவுகளின் செயல்கள்

பார்லி – எளிதில் ஜீரணமாகும். வாந்தி பேதியைக் கண்டிக்கும். ஆண்மையைப் பெருக்கும்.

வெண்ணெய் – ஆண்மையைப் பெருக்கும. மேனி எழிலை கூட்டும். ஜீரணத்திற்கு நல்லது. காயங்களை ஆற்றும். ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

மோர் – மூல வியாதி வீக்கங்கள் இவற்றிற்கு நல்லது. ஜீரண அக்னியை தூண்டும்.

வெண்ணீர் – கொழுப்புகளை ஜீரணமாகும். வாய்வு உண்டாவதை தடுக்கும். ஆஸ்துமா, ஜலதோஷம், ஃப்ளூ இவற்றை குறைக்க உதவும்.

பசும்பால் – நுரையீரல், நீரிழிவு, ஜலதோஷத்திற்கு நல்லது.

மிளகாய் – ஜீரணத்திற்கு நல்லது. பசியை தூண்டும்.

நண்டு – சிறுநீரகத்திற்கு நல்லது. உடலில் நீரை சேமிக்க உதவுகிறது.

மீன் – ஜீரண அக்னியை அதிகரிக்கும். பசியை தூண்டும். பார்வை, ஞாபக சக்தி இவற்றிற்கு நல்லது. காயங்களை ஆற்ற உதவும்.

பூண்டு – வயிற்றுப்பூச்சிகளை அழிக்கும். உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும். தூக்கமின்மையை போக்கும்.

இஞ்சி – உடலை சூடாக்கும். ரத்த ஓட்டத்திற்கு உதவும். ஜீரணத்திற்கு நல்லது.

ஆட்டுப்பால் – ஆஸ்த்துமாவிற்கு நல்லது.

ஆட்டு இறைச்சி – ஜீரண அக்னியை தூண்டும். உடல் வலிமையை அதிகரிக்கும். ஸ்ட்ரெஸ் பாதிப்புகளை குறைக்கும்.

அரிசி – சுலபமாக ஜீரணிக்கும். வாந்தி, பேதியை நிறுத்தும். ஆண்மை சக்தியை அதிகரிக்கும்.

உணவு நலம் ஆகஸ்ட் 2010

அறுசுவை, உணவு, ஆயுர்வேதம், உணவுப் பதார்த்தங்கள், நாக்கு, இனிப்பு, புளிப்பு, கசப்பு, அரிசி, பருப்பு, வெல்லம், சர்க்கரை, வாதம், கபம், பித்தம், எலுமிச்சை, தக்காளி, புளி, வாந்தி, ஆண்மையைப், ஜீரணம், ஞாபக சக்தி, மூல வியாதி, வீக்கங்கள், ஆஸ்துமா, ஜலதோஷம், ஃப்ளூநுரையீரல், நீரிழிவு, ஸ்ட்ரெஸ்,


Spread the love